திங்கள், 18 ஏப்ரல், 2016

நூறு சதம்.

நூறு சதம்,
நூறு சதம்
என்று திரும்பிய பக்கமெல்லாம்
பார்க்க கேட்க முடிகிறது.
தேர்தல்ஆணையம் நிறைய
மெனக்கெடுகிறது ,
பொதுமக்களை விடுங்கள்,
கட்சி தீவிரவாதிகள்,அபிமானிகள்,
வேட்பாளரின் உறவு,நட்பு என்றும்
அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள்,
அரசியல் சாக்கடை என்று ஒதுங்கும்
ஆசாரசீலர்கள்,இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களிடம் பணம்
வாங்கிவிட்டோமே என்று தயங்கும்
மனசாட்சி உள்ளவர்கள் என்று பலவிதம்.
ஆனால்....
தேர்தல்பணி புரியும் அலுவலர்கள் நூறு சதம் வாக்களிப்பதை முதலில் உறுதி செய்தால் நல்லது.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

என் ராஜபாட்டை : தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

என் ராஜபாட்டை : தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!: என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு...

வியாழன், 7 ஏப்ரல், 2016

வணக்கம் ,
வீடு தேடி வந்த ஒரு முகவரின் வேண்டுகோள்படி முட்டாளாக காசோலை கொடுத்து விட்டேன் .
முதல் இரண்டு நாள் முகவரே பேப்பர் போட்டார் .
அடுத்து நான்கு நாட்கள் பேப்பர் வரவில்லை .
ஐந்தாவது நாள் ஒன்பது மணிக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு .
சார் வீடு எங்கே ...
என்ன விசயம் என்று நான் கேட்க 
பேப்பர் போடா என்று பதில் வந்தது 
ஒன்பது மணிக்கு போடுவது என்றால் எனக்கு பேப்பர் ஏ வேண்டாம் என்று துண்டித்தேன்.
முகவரை தொடர்பு கொண்டால் கவனிக்கிறேன் என்றார் .
தொடர்ந்து வந்து ....
இன்று வரவில்லை...
வழக்கமாக வருபவரை தொடர்பு கொண்டால் 
மன்னிக்க்கவும் நாங்கள் மூன்று பேர் என்று துண்டித்துவிட்டார் 
முகவரை தொடர்பு கொண்டால் இலவச என்னில் புகார் செயுங்கள் என்று சொல்லிவிட்டார்.
என்ன செய்ய ?
அன்புடன் 
பொன்னுசாமி 

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

யாரோ சொன்னார்கள்
ஏப்ரல் முதல் தேதி முட்டாள்
என்று ....
மீதி 364 நாட்களும் அறிவாளி
என்று ....
யார் உறுதி கொடுப்பது ?